வீட்டு வசதி வாரிய நிலம் 20 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு
சென்னை:
சென்னையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 2.83 ஏக்கர் நிலம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழக வீட்டு வசதிவாரியத்திற்கே கிடைத்துள்ளது.
சென்னை திருவான்மியூர் அருகே உள்ள இந்திரா நகரில் வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 2.83 ஏக்கர்நிலத்தை பரசுராமன் என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமித்தார்.
இதை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் சார்பில் நீதிமன்றத்தில்வழக்குத்தொடரப்பட்டது. இதற்கிடையேஆக்கிரமித்திருந்த நிலத்தில் வீடுகள் கட்டி அவற்றை வாடைக்கு விட்டிருந்தார் பரசுராமன். சில நிலங்களைபிறருக்கு விற்று விட்டார்.
இந்நிலையில் 20 ஆண்டுகள் கழித்து பரசுராமன் ஆக்கிரமித்த நிலம், வீட்டு வசதி வாரியத்திற்குச்சொந்தமானதுதான் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அங்குகட்டப்பட்டிருந்த கட்டடங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த மீட்பு நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டது.












Click it and Unblock the Notifications