For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடிபோதையில் பலருக்கு கத்தி குத்து: ஒருவர் பலி- மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை வடபழனியில் குடிபோதையில் டெய்லர் ஒருவரைக் கொன்று விட்டு 3 பேரைக் காயப்படுத்தி விட்டுத் தலைமறைவான நபரைபோலீஸார் கைது செய்துள்ளனர்.

வடபழனி பகுதியில் இரவு நேரத்திவ் குடிபோதையில் வெறித்தனமாக ஓடிய ரமேஷ் பாபு என்பவர், சாலையோரம் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த ராஜு என்ற டெய்லரை சரமாரியாகக் குத்தினார். இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்தார்.

பின்னர் மேலும் 3 பேரையும் கத்தியால் குத்தினார். இதில் அவர்களும் படுகாயமடைந்தனர்.

இந்த வெறிச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமறைவாகி விட்ட அந்த நபரை போலீஸார் தேடி வந்தனர். இந்தநிலையில் சென்னைப் புறநகர்ப் பகுதியான நெற்குன்றம் அருகே அவர் பிடிபட்டார்.

அவருக்கு மன நிலை பாதிக்கப்பட்டவாராக இருக்கலாம் என்றும் தெரிகிறது. தீவிர விசாரணை நடந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X