பைனான்சியரிடம் ரூ.50 லட்ச வைர நகைகள் கொள்ளை
சென்னை:
சென்னையில் சினிமா, கார்களுக்கு பைனான்ஸ் செய்யும் டாக்டர் ஒருவரின் வீட்டிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ளநகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அவ்வீட்டு வேலைக்காரியைப் போலீசார்கைது செய்துள்ளனர்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஹாங்டன் சாலையைச் சேர்ந்தவர் டாக்டர் பாரத் மேத்தா. டாக்டர் தொழிலுடன்இவர் சினிமா தயாரிப்பாளர்களுக்குக் கடன் வழங்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் கார்வாங்குபவர்களுக்கும் அவர் கடன் வழங்கி வருகிறார்.
டாக்டர் மேத்தாவின் வீட்டில் அரியலூரைச் சேர்ந்த வேலுச்சாமி என்ற ராஜுவும் அவருடைய மனைவிஆரோக்கியமும் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் டாக்டர் மேத்தாவின் மனைவியான அனிதா மேத்தா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவர் பூஜைஅறையில் இருந்தபோது ஆரோக்கியம் சத்தமே இல்லாமல் பீரோவை சாவி போட்டுத் திறந்துள்ளார்.
பின்னர் அதிலிருந்த ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளையும், ரூ.8 லட்சம் ரொக்கப் பணத்தையும்திருடியுள்ளார். பின்னர் அதைத் தன் கணவனிடம் கொடுத்து அவரை வெளியே அனுப்பி விட்டார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் பீரோவைப் பூட்டி விட்டு சாவியை வழக்கமாக டாக்டர் மேத்தா தம்பதியர் வைக்கும்இடத்திலேயே வைத்து விட்டார் ஆரோக்கியம். சிறிது நேரம் கழித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்தன் உறவினரைப் பார்க்கப் போவதாகக் கூறிவிட்டு அவரும் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் தற்செயலாக பீரோவைத் திறந்து பார்த்த அனிதா மேத்தா, அதிலிருந்த நகைகள், பணம்திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் சேத்துப்பட்டு போலீசாரிடம் புகார்கொடுத்தார்.
உடனடியாக விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி ஆரோக்கியத்தைக் கைது செய்தனர். அவரிடம்நடத்தப்பட்ட விசாரணையின் போதுதான் அவர் நகைகள் மற்றும் பணத்தைத் தன் கணவரிடம் கொடுத்து அவரைஅரியலூருக்கு அனுப்பியுள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து ராஜுவைப் பிடிக்க தனிப் போலீஸ் படை அரியலூருக்கு விரைந்துள்ளது.












Click it and Unblock the Notifications