வைகோ குறித்து வேலூரில் பரவிய திடீர் வதந்தி!
வேலூர்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் உடல் நலம் குறித்து வேலூரில் திடீரென நேற்று மாலை வதந்தி பரவியது. இதனால் நகரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் வைகோ அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வைகோசிறையிலேயே மயங்கி விழுந்து விட்டதாகவும், அவசரமாக அவர் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வதந்தி பரவியது.
இதையடுத்து பத்திரிக்கையாளர்களும் ஆயிரக்கணக்கான மதிமுகவினரும் பொது மக்களும் சிறையில் கூடினர். மதிமுகவினரில் பலரும்பெரும் கொந்தளிப்பில் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து சிறைக்கு வெளியே வந்த ஜெயிலர் ராமச்சந்திரன், வைகோ முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும், சிறைக்குள் அவர்வாலிபால் ஆடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் போலீசாரும் ஓடி வந்து மதிமுகவினரை சமாதானப்படுத்தினர். இதன் பிறகே வதந்திக்கு முடிவு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications