பூட்டிய வீட்டில் 2 பெண்கள், சிறுவன் படுகொலை
திருத்துறைப்பூண்டி:
நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பூட்டிய வீட்டில் தாய், மகள், பேரன் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவர் தனது மகள் தீபா மற்றும் பேரன்பிரகதீஸ்வரனுடன் வசித்து வந்தார்.
இந் நிலையில் கடந்த 6ம் தேதிமுதல் இவர்களது வீடு பூட்டப்பட்டிருந்தது. ஆனால், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால்சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
அப்போது முன் அறையில், பத்மாவதி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து வீடு முழுவதும் சோதனை போட்டனர். அப்போது சமையல் அறையில் இருந்த நெல் குதிருக்குள் தீபா மற்றும்அவரது 3 வயது மகன் பிரகதீஸ்வரன் ஆகியோரின் பிணங்கள் கிடந்தன.
வீட்டிலிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகை, பொருட்கள் திருடு போயுள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நிடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications