கர்நாடகாவில் மேலும் 54 பேருக்கு சார்ஸ் பரிசோதனை
பெங்களூர்:
கர்நாடகாவில் மேலும் 54 பேருக்கு சார்ஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு டாக்டர் கடந்த மாதம் மலேசியா சென்று திரும்பியபோது அவருக்கு சார்ஸ் நோய்இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கர்நாடகாவில் அவருடன் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் உள்ளிட்ட 15 பேருக்கு நேற்று சார்ஸ்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மேலும் 54 பேருக்கு சார்ஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுடைய ரத்தம்பரிசோதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டதாகவும் டாக்டர் குமாரசாமி தெரிவித்தார்.
மேலும் மணிப்பாலில் சமீபத்தில் நடந்த மாநாட்டின்போது சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அந்த டாக்டருடன்இருந்ததாகக் கருதப்படும் மேலும் 3 டாக்டர்களுக்கும் சார்ஸ் பரிசோதனை விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.அவர்கள் சிக்கிம் மற்றும் நேபாளத்தில் உள்ளனர்.