தொடர் நஷ்டம்: 4 அரசு நிறுவனங்களை மூட ஆடிட்டர் ஜெனரல் பரிந்துரை
சென்னை:
தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் தமிழக அரசுக்குச் சொந்தமான 4 நிறுவனங்களை மூடி விடுமாறு மத்திய அரசின் கணக்குத் தணிக்கைதலைமை ஆடிட்டர் ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார்.
தணிக்கை அதிகாரியின் பரிந்துரை விவரம்:
தமிழ்நாடு பெயின்ட்ஸ் மற்றும் அல்லைட் புராடக்ட் நிறுவனம், மாநில பொறியியல் மற்றும் சேவை நிறுவனம், பல்லவன் போக்குவரத்துஆலோசனைக் கழகம், தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சி நிறுவனம் ஆகியவை தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகின்றன.
இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டு 15 முதல் 30 ஆண்டுகள் வரை ஆகியும் ஒரு ஆண்டு கூட லாபம் ஈட்டவில்லை.
மேலும் இவற்றில் புரளும் தொகையின் அளவு கூட 4 கோடியைத் தாண்டவில்லை. இதனால் இந்த நிறுவனங்களை மூடினால் தான்அரடுக்கு ஏற்பட்டு வரும் நஷ்யடத்தைக் குறைக்க முடியும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த பரிந்துரையால் இந் நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.