பங்களாதேஷில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள்
டெல்லி:
பங்களாதேஷில் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. இந்தியாவுக்கு எதிராக 155 தீவிரவாத முகாம்களை நடத்தி வருவதாகஇந்திய உளவுப் பிரிவுகள் கண்டுபிடித்துள்ளன.
இவற்றைை உடனே மூட நடவடிக்கை எடுக்குமாறு பங்களாதேஷ் அரசிடம் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.
ஐ.எஸ்.ஐ. தவிர அல்-கொய்தாவின் நிதியுதவியுடன் இந்தத் தீவிரவாதிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.குறிப்பாக இந்தியாவின் வட-கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நாகா, போடோ, உல்பா, திரிபுரா தீவிரவாதிகளுக்கு இந்தமுகாம்களில் பயிற்சி தரப்படுகிறது.
இந்தியாவில் தேடப்பட்டு வரும் 85 தீவிரவாதிகள் பங்களாதேஷில் தான் அடைக்கலம் புகுந்துள்ளதாகவும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை தன்னிடம் ஒப்படைக்குமாறும் இந்தியா கோரியுள்ளது.
பங்களாதேஷின் காக்ஸ் பஜார், சில்ஹிட், சிட்டகாங் ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் உள்ளன.
இந்த முகாம்களின் முழு விவரத்தையும் சமீபத்தில் பங்களாதேஷ் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் இந்தியவெளியுறவுத்துறைச் செயலாளர் கபில் சிபல் வழங்கியுள்ளார்.
-->