உப்பு நீராக மாறி வரும் சென்னை தண்ணீர்
சென்னை:
சென்னையின் புற நகர்ப் பகுதி கிணறுகளில் உள்ள தண்ணீரில் உப்புத்தன்மை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடல் நீர் அதிக அளவில் ஊடுறுவி வருவதே இதற்கு முக்கியக் காரணம் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.சி.பி.ராமசாமி ஆய்வு மைய கெளரவ இயக்குனர் நந்திதா கிருஷ்ணா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
கருத்தரங்கு ஒன்றில் பேசிய நந்திதா,
நிலத்தடி நீர் அதிக அளவு எடுக்கப்பட்டு வருவதும், போதிய அளவு மழை இல்லாத காரணத்தாலும், நிலத்தடி நீர் ஊற்றுகள்வறண்டுவிட்டன.
இதனால் கடல் நீர் அந்த ஊற்றுகளில் ஊடுருவ ஆரம்பித்துள்ளது. இதனால் சென்னையில் புறநகர்களில் உள்ள கிணறுகள், போரிங்குழாய்களில் நீரின் தன்மை மாறி வருகிறது.
கடந்த 1996ம் ஆண்டிலிருந்து ஈஞ்சம்பாக்கம் முதல் எண்ணூ
செங்கல்பட்டு மாவட்டம் நென்மேலி, காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் இயற்கையாகவேஅருமையான குடிநீர் கிணறுகள் இருந்தன. ஆனால் அவை இப்போது வறண்டு போய் விட்டன.
இருப்பினும், அந்தப் பகுதி மக்களின் கடுமையான முயற்சியின் காரணமாகவும், மழை நீர் வடிகால் வசதிகளை சரியான முறையில்செய்ததன் காரணமாகவும் தற்போது கோடை காலத்திலும் கூட கிணறுகளில் எட்டு அடி அளவுக்கு தண்ணீர் இருக்கும் அளவுக்குநிலைமை மாறியுள்ளது.
இந்தப் பகுதிகளில் கோவில் குளங்களில், மழை பெய்யும்போது தண்ணீரை சேமித்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.ஆனால், சென்னையில் மழை நீரை சேமிக்க எந்த வசதிகளும் இல்லை. இதனால் நகரின் தண்ணீர் தட்டுப்பாடு ஆண்டுக்காண்டுஅதிகரித்துக் கொண்டு தான் வரும் என்றார் அவர்.