ஊட்டி சென்றார் ஆளுநர் ராமமோகன் ராவ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஊட்டியில் நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சியைத் துவக்கி வைப்பதற்காக தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ்அங்கு கிளம்பிச் சென்றார்.
ஊட்டியில் குளுகுளு சீசன் "சூடு" பிடித்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துகுவிந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் ஊட்டியில் 107வது மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இந்த மலர்க் கண்காட்சியைத் துவக்கி வைப்பதற்காக ராமமோகன் ராவ் இன்று காலை ஊட்டிக்குப் புறப்பட்டுச்சென்றார்.
மலர்க் கண்காட்சியில் 17,000க்கும் மேற்பட்ட மலர்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. மேலும் 250க்கும்மேற்பட்ட பூந்தோட்டங்களும் அமைக்கப்படவுள்ளன. சிறப்பான முறையில் வடிவமைக்கப்படும்பூந்தோட்டங்களுக்குப் பரிசுகளும் காத்துள்ளன.












Click it and Unblock the Notifications