For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த மாதம் இந்தியா- பாகிஸ்தான் பேச்சு?

By Staff
Google Oneindia Tamil News

லாகூர்:

இந்தியாவுடனான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் துவங்கலாம் என பாகிஸ்தான் செய்தித்துறை அமைச்சர் ரஷீத் அஹமத்தெரிவித்தார்.

பாகிஸ்தானுடனான பேச்சு நடத்துவதற்கான திட்டத்தை இந்தியா தயாரித்துவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த்சின்ஹா கூறினார்.

ரஷீத் அகமத் கூறுகையில், முதலில் அதிகாரிகள் அளவிலும் பின்னர் தலைவர்கள் அளவிலும் பேச்சு நடக்கும்.பேச்சுவார்த்தைக்காக பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தான் வரலாம் அல்லது பிரதமர் மிர் ஜமாலி டெல்லி செல்லலாம். இதை ஒருபிரச்சனையாக்க பாகிஸ்தான் விரும்பவில்லை. இந்தியாவுக்கு எது வசதியோ அதைச் செய்யத் தயார் என்றார்.

டெல்லியில் யஷ்வந்த் சின்ஹா பேசுகையில்,

முதலில் அதிகாரிகள் மட்டத்தில் தான் பேச்சு. பேச்சுவார்த்தைக்கான முழுத் திட்டமும் தயார். எல்லை தாண்டிய பயங்கரவாதம்நின்றால் தான் பேச்சுவார்த்தைகள் அர்த்தம் பெறும். காஷ்மீரை மட்டும் பேச முடியாது. தீவிரவாதத்தையும் சேர்த்துத் தான்பாகிஸ்தானுடன் பேச முடியும் என்றார்.

எல்லையில் சண்டை:

இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு முதல் திடீரென இந்தியப் படைகளை நோக்கி கனரக துப்பாக்கிகளால்தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து இந்தியப் படைகளும் திருப்பித் தாக்கி வருகின்றன.

இந்தியாவுடனான பேச்சுவார்த்தையே பாகிஸ்தான் ராணுவம் முற்றிலும் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் கடந்த ஒருவாரமாகவே இரு தரப்பிலும் துப்பாக்கிச் சூடு பெறுமளவில் குறைந்துவிட்டதாகவும் நேற்று தான்மீண்டும் இந்தச் சண்டை தொடங்கியதாகவும் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X