அடுத்த மாதம் வாஜ்பாய் சீனா பயணம்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் அடுத்த மாதம் சீனா செல்கிறார். இதனை பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று அறிவித்தார்.
சமீபத்தில் தான் பெர்னாண்டஸ் சீனா சென்று திரும்பினார். இந்தியா மீது சீனா போர் தொடுத்ததையடுத்து அந் நாட்டுடனான உறவுசீர்குலைந்தது. ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது தான் ஓரளவுக்கு நிலைமை சரியானது.
அவர் சீனா சென்று வந்தார். இதையடுத்து நரசிம்மராவ் ஆட்சியில் இந்திய- சீன உறவு புதிய அத்தியாயத்தைத் தொட்டது. சீனாவுடனானஉறவை சீராக்கிய ராவ், 1993ம் ஆண்டில் பெய்ஜிங் போய் வந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் இப்போது வாஜ்பாய் சீனாசெல்ல உள்ளார்.
இந்தியா- சீனா இடையே 9,000 கி.மீ. தூர எல்லை உள்ளது. இதில் பல பகுதிகள் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானுக்கு சீனாமறைமுகமாக அணு, ஏவுகணைத் தொழில்நுட்பத்தைத் தந்து வந்தாலும் இப்போது இந்தியா- சீனா இடையிலான உறவில் எந்தப் பதற்றமும்இல்லை.
டெல்லியில் ராணுவ தளவாட ஆலைகளின் பொது மேலாளர்கள் கூட்டத்தில் பேசிய பெர்னாண்டஸ் கூறியதாவது: இந்தியாவுடன்நல்லுறவை சீனா விரும்புகிறது. இதை என்னிடம் அந் நாட்டுத் தலைவர்கள் தெளிவாகக் கூறிவிட்டனர். இதையடுத்து வாஜ்பாய் அங்குசெல்ல முடிவு செய்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் இரு தரப்பிலும் எல்லையில் ஒரு துப்பாக்கி கூட சுடப்படவில்லை. இந்தியாவும் சீனாவும் இணைந்து பொருளாதாரவளர்ச்சியில் புதிய உச்சியைத் தொட முடியும் என்றார்.
-->












Click it and Unblock the Notifications