பழைய கோழிக் கறி கொடுத்து உடல் நலத்தை கெடுத்தார்கள்: அழகிரி புகார்
திருச்சி:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானஅழகிரி சிறை நிர்வாகத்தினர் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
திருச்சி சிறையில் இருந்து வெளியே வந்த அவரை திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் சால்வைபோர்த்தி, கட்டித் தழுவி, கண் கலங்க வரவேற்றார். அதே போல அவர்களின் தாயார் தயாளு அம்மாளும்அழகிரியைக் கண்டவுடன் கண் கலங்கினார்.
பின்னர் தனது குடும்பத்தினருடன் மதுரை புறப்பட்ட அழகிரி அங்கு நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர்,உயர்நீதிமன்ற நிபந்தனைப்படி பெங்களூர் கிளம்பினார். இன்று முதல் பெங்களூர் முதன்மை செஷன்ஸ் நீதிபதி முன்தினசரி அவர் ஆஜராகி கையெழுத்திடுவார்.
இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி,
சிறை அதிகாரிகளுக்கு முதல் வகுப்பு என்றால் என்ன என்றே தெரியவில்லை. எனக்கு ஒரு மாதமாக மின் விசிறிகூட கொடுக்கப்படவில்லை. மிகுந்த தொல்லைப்படுத்தினார்கள்.
பழைய கோழிக் கறியைக் கொடுத்து எனது உடல் நலத்தைக் கெடுத்தார்கள். சேலம் சிறையில் முல்லைவேந்தனுக்குஏற்பட்ட கதி (ரெளடிகளால் கழுத்து அறுக்கப்பட்டது) எனக்கும் ஏற்படுமோ என்று கூட நான் பயப்பட வேண்டியசூழ்நிலை ஏற்பட்டது.
என் மீது போடப்பட்டுள்ளது பொய் வழக்கு. அதை ஏற்கனவே கூறியுள்ளேன். இப்போதும் அதைத்தான்கூறுகிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications