கோவையை வாட்டும் குடிநீர்ப் பஞ்சம்
கோவை:
கோவை மாநகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறுவானி அணையில் இதுவரை இல்லாத அளவுக்கு நீர் இருப்பு குறைந்துவிட்டது.
கோவை மாநகருக்கு குடிநீர் விநயோகம் செய்வதில் சிறுவானி மற்றும் பில்லூர் அணைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதில் சிறுவானிஅணையில் தண்ணீர் சுத்தமாக வறண்டு விட்டது. அங்கு வெறும் 863 மீட்டர் தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
இதனால் குடிநீர்த் தேவைக்கு சிறுவானியை நம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயர் திறன் கொண்ட மின்சார பம்புகள் மூலம் தண்ணீர்எடுத்து வினியோகிப்பது குறித்து மாநிகராட்சி நர்வாகம் யோசித்து வருகிறது.
இதனால் நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்போதும் குடிநீர்ப் பிரச்சினையே ஏற்படாத கோவை நகரில் தற்போது ஒரு குடம் தண்ணீர் ரூ. 5 வரை விற்கப்படுகிறது.
தற்போது சிறுவானி வேறு வறண்டு விட்டதால், கடும் குடிநீர்ப் பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போது ஏற்பட்டு புயல் சின்னத்தால் கோவை பகுதியிலும் மழை பெய்தால் தான் இந்தத் தட்டுப்பாடு நீங்கும்.












Click it and Unblock the Notifications