For Daily Alerts
Just In
ஓகேனகல் அருவி சுழலில் சிக்கி வாலிபர் பலி
ஓகனேக்கல்:
தர்மபுரி மாவட்டம் ஓகனேக்கல் அருவியில் மூழ்கி இளைஞர் பலியானார்.
பாப்பிரெடிப்பட்டி அருகே உள்ளது புதுப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் ஓகனேக்கல் அருவியில் குளித்துக்கொண்டிருந்தார். அருவியில் நீர் கொட்டும் இடத்துக்கு அருகே ஆற்றுக்குள் இறங்கி அவர் குளித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நீர்சுழலில் சிக்கிக் கொண்ட அவர் ஆற்றில் மூழ்கி இறந்தார்.
ஓகனேக்கல் அருவியில் தற்போது தண்ணீரின் வேகம் குறைவாக இருந்தாலும், ஆற்றில் சுழல்கள் அதிகமாகஇருப்பதால் அருவியின் சிலஇடங்களில் குளிப்பதற்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.
Comments
Story first published: Tuesday, May 13, 2003, 5:30 [IST]