ஐ.நா: மோதலைத் தவிர்த்த இந்தியா- பாகிஸ்தான்
ஐ.நா. சபை:
ஐ.நா. சபையில் இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் கிளப்பின. ஆனால், கடந்த பலஆண்டுகளில் முதன்முறையாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக் கொள்ளவில்லை.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் பேசிய இந்தியத் தூதர் விஜய் நம்பியார், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும்கருத்து வேறுபாடுகளை பேசித் தான் தீர்க்க வேண்டும். அதே நேரத்தில் மறைமுகமானத் தாக்குதல்கள், எல்லைதாண்டிய பயங்கரவாதம் ஆகியவற்றை நிறுத்தினால் தான் பேச்சுவார்த்தையே சாத்தியமாகும்.
எந்த நாடுமே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொண்டால் தான் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியும். காஷ்மீரில் ஐ.நா. நேரடிக் கண்காணிப்பில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கமுடியாது என்றார்.
அதே நேரத்தில் பாகிஸ்தானை அவர் தாக்கி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.
அதே போல பாகிஸ்தான் தூதர் பேசும்போதும், இந்தியாவைத் தாக்கி ஏதும் பேசவில்லை. அதே நேரத்தில் காஷ்மீர்மக்களின் மனப்பான்மையை இந்தியா புரிந்து கொண்டு அதற்கேற்ப பேச்சு நடத்த முன் வர வேண்டும் என்றார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஐ.நா. சபையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது தான் வழக்கம். இப்போது இருநாட்டு உறவில் நல்ல மாற்றம் ஏற்பட்டு வருவது ஐ.நாவிலும் எதிரொலித்துள்ளது.