17ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவு: எஸ்.எஸ்.எல்.சி.- 31ம் தேதி
சென்னை:
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் 17ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.அதே போல் 31ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.
பிளஸ் டூ தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கின. மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் மாணவ, மாணவிகள்இந்தத் தேர்வுகளை எழுதினர்.
தேர்வுகள் முடிந்த மார்ச் 25ம் தேதியே விடைத் தாள்களைத் திருத்தும் பணிகளும் தொடங்கி விட்டன. தமிழகம்முழுவதும் 40 மையங்களில் நடைபெற்ற இந்தப் பணிகள் கடந்த மாத இறுதியிலேயே முடிவடைந்தன.
இதையடுத்து மாணவ, மாணவிகளின் மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக முழுவேகத்தில் நடைபெற்றன. தற்போது அந்தப் பணிகளும் முடிவடைந்து விட்டன. கடைசிக் கட்டமாக விடுபட்டஎண்களைச் சரிபார்க்கும் பணி மட்டும் தற்போது நடந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து பிளஸ் டூ தேர்வு முடிவுகள் 17ம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 9.30 மணிக்கு மாணவ, மாணவிகள் தாங்கள் தேர்வுகள் எழுதியமையங்களுக்குச் சென்று முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அன்று பகல் 12 மணிக்கு மேல் இன்டர்நெட்டிலும்பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.
கடந்த ஆண்டும் மே 17ம் தேதிதான் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் ஒவ்வொரு ஆண்டிலும் மே 17ம் தேதியே முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றும் தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
31ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி.?
அதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வரும் 31ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.
விடைத் தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எப்படியும் 31ம் தேதி தேர்வு முடிவுகள்வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.