ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புக்கு பாக். தடை
இஸ்லாமாபாத்:
இந்தியா, அமெரிக்காவின் நெருக்குதலுக்குப் பணிந்து ஏற்று ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைபாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது.
இந்தத் தீவிரவாத அமைப்பு தான் காஷ்மீரில் ராணுவத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்தஅமைப்பைத் தடை செய்ய வேண்டும், இந்த அமைப்பின் பயிற்சி முகாம்களை மூட வேண்டும் என இந்தியா கோரிவந்தது.
ஆனால், அதை பாகிஸ்தான் ஏற்க மறுத்துவந்தது. இந் நிலையில் ஹிஸ்புல் அமைப்பைத் தடை செய்தால் மட்டும்பேச்சுவார்த்தை நடத்துவோம் என அமெரிக்காவிடம் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
இதையடுத்து இந்த அமைப்பை உடனடியாத் தடை செய்யுமாறு பாகிஸ்தானை அமெரிக்கா வற்புறுத்தியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழையவே ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையத்சலாவுதீனுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந் நிலையில் அந்த அமைப்புக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை முழுமையாக இருக்குமா அல்லதுஉலகை ஏமாற்றும் வகையில் பெயருக்காக பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கையா என்பது போகப் போகத் தான்தெரியும்.
இதற்கு முன்னரும் கூட பல தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஆனால்,நேர்மையான நடவடிக்கைகளை எடுத்தது இல்லை. ஆனால், இந்த முறை அமெரிக்க நெருக்குதல் இருப்பதால்பாகிஸ்தான் ஒழுங்காக நடந்து கொள்ளும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.