பொல்லாதவர்கள் கையில் சிக்கி விட்டது பொடா: கருணாநிதி வருத்தம்
சென்னை:
தமிழகத்தில் அரசு டாக்டர்கள் இன்று ஒரு நாள் அடையாள முழு வேலை நிறுத்தம் மேற்கொள்கிறார்கள். இதனால்தமிழகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
வரும் 21ம் தேதி முதல் டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதைச் சமாளிக்க3,000க்கும் மேற்பட்ட தாற்காலிக டாக்டர்களை அரசு அவசர அவசரமாக நியமித்து வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை அளிக்க தனியார் டாக்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகஅரசு கூறுகிறது. ஆனால், அப்படி யாரையும் பார்க்க முடியவில்லை.
முதலில் பெரிய அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் புறக்கணித்தனர். அவசர சிகிச்சைகளை மட்டுமேசெய்வோம் என்று கூறினர். ஆனால், அதையும் கூட செய்யவில்லை. இதனால் மதுரையில் விபத்தில் காயமடைந்தஅப்பாவி வாலிபர் உயிரிழந்தார்.இதையடுத்து ஊசி போடா போராட்டம் நடத்தப்பட்டது. மருத்துவமனைகளுக்கு வந்த யாருக்கும் எந்தசிகிச்சையும் அளிக்க டாக்டர்கள் மறுத்தனர். இந் நிலையில் இன்று ஒரு நாள் முழு வேலை நிறுத்தத்தில் டாக்டர்கள்ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனைக்கே வர மாட்டோம் என டாக்டர்கள் அறிவித்துவிட்டனர். சுமார் 10,000 அரசு டாக்டர்கள் இந்தப்போராட்டத்தில் பங்கேற்பதால் மாநிலம் முழுவதும அரசு மருத்துவமனைகளில் யாருக்கும் எந்த சிகிச்சையும்அளிக்கப்படவில்லை.
நர்ஸ்களும் மருத்துவமனை ஊழியர்களும் மட்டுமே மருத்துவமனைகளில் அமர்ந்துள்ளனர். அவர்கள் அங்குவரும் நோயாளிகளை விரட்டி விட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கையாக தனியார்மருத்துவர்களையும் முன்னாள் அரசு மருத்துவர்களையும் மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைத்திருப்பதாகஅரசு கூறுகிறது.
அரசு இவ்வாறு சொன்னாலும் பெரும்பாலான மருத்துவமனைகளில் ஒரு டாக்டர் கூட இல்லை.
மேலும் 21ம் தேதி முதல் நடக்கவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தைக் கருத்தில் கொண்டு 3,000 டாக்டர்களைநியமிக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால், இன்றைய போராட்டத்தை சமாளிக்க அவசரமானநடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மீது எஸ்மா சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுஎச்சரித்துள்ளது. ஆனால், எஸ்மா சட்டம் பாய்ந்தாலும் திட்டமிட்டபடி இன்றும், 21ம் தேதி முதல்காலவரையரையின்றியும் ஸ்டிரைக் நடைபெறும் என்று தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் கூறியுள்ளது.