For Daily Alerts
Just In
கிருஷ்ணகிரியில் சாலை விபத்து: 6 பேர் பலி
கிருஷ்ணகிரி:
தர்மபுரிாவட்டம் கிருஷ்ணகிரி அருகே நடந்த சாலை விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த 6 பேர் பலியானார்கள்.
பெங்களூரில் வசித்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது சொந்த ஊக்குச் சென்று விட்டு பெங்களூர் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று காலை கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டி என்ற இடத்தில் அவர்களது வேன் வந்தபோது, எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியது.
இதில், வேனில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
காயமடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Thursday, May 15, 2003, 5:30 [IST]