For Quick Alerts
For Daily Alerts
Just In
பி.இ. கவுன்சிலிங்: விண்ணப்பங்கள் விற்பனை தொடக்கம்
சென்னை:
பி.இ. சேர்க்கை கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பப் படிவஙகள் நேற்று முதல் விற்பனைக்கு வந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூன் 23ம் தேதி நடக்கிறது. பொது நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள் இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 63 மையங்களில் விற்கப்படுகின்றன.
மொத்தம் தமிழகத்தில் உள்ள 235 கல்லூரிகளில் 45,000 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை இந்தக் கவுன்சிலங் மூலம் நடைபெறவுள்ளது.
Comments
Story first published: Thursday, May 15, 2003, 5:30 [IST]