சசியுடன் ஜெ. நாளை ஹைதராபாத் பயணம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தனது உயிர்த் தோழி சசிகலாவுடன் நாளை ஹைதராபாத் செல்கிறார். அங்குள்ள தனது பண்னை வீட்டில் 15 நாட்கள் ஓய்வெடுக்கிறார்.
கடந்த 3 மாதமாக தொடர்ந்து நடந்து வந்த தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் 10ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து அவர் ஓய்வுக்காக ஹைதராபாத் செல்கிறார். 14ம் தேதிக்குள் டான்சி தீர்ப்பு எந்த நேரமும் வரலாம் என்று டெல்லியில் இருந்து தகவல்கள் வந்ததால் அவர் தனது ஹைதராபாத் பயணத்தை ஒத்தி வைத்திருந்தார்.
ஆனால், கோடை விடுமுறைக்குப் பின்னரே தீர்ப்பு வரும் என்ற தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன. இதையடுத்து ஜெயலலிதா ஹைதராபாத் கிளம்புகிறார்.
அவரது தனி விமானம் நாளை பகல் 12.30க்குக் கிளம்பும் என மீனம்பாக்கம் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெயலலிதாவுடன் சசிகலாவும் செல்கிறார். தமிழக அரசுக்குக் கடன் வழங்குவது தொடர்பாக விவாதிக்க உலக வங்கிக் குழு அடுத்த வாரத்தில் சென்னை வருகிறது. அப்போது ஜெயலலிதா சென்னை வந்துவிட்டு மீண்டும் ஹைதராபாத் செல்வார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications