கள்ளக் காதல்: ஒரே குடும்பத்தில் 3 பேர் படுகொலை
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ளது மீளவிட்டான்புரம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன். இவருக்கும், கக்கன்ஜி நகர் பகுதியில் உள்ள ஒருவரின் மனைவிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.
இந் நிலையில், ஜான்சன் நேற்று இரவு கடையொன்றின் முன் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் ஜான்சனை அங்கேயே சரமாரியாக வெட்டிக் கொன்றது. பின்னர் ஜான்சனின் அண்ணன் அந்தோணிச்சாமியின் வீட்டிற்கு சென்ற கும்பல், அவரையும் வெட்டித் தள்ளியது.
அவரது மகன் தினேஷும் கொலை வெறிக் கும்பலிடமிருந்து தப்பவில்லை. அவரும் கொல்லப்பட்டார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications