ரெளடியை பிடிக்க போய் திருடனானசப்-இன்ஸ்பெக்டர்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ரெளடியைப் பிடிக்க வந்த சப்-இன்ஸ்பெக்டரை திருடன் என நினைத்த பொதுமக்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

மதுரை அருகே இச் நடந்துள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மதுரை அருகே உள்ள பெருங்குடி பகுதிக்கு வந்தார். அங்கு மறைந்திருந்த ஒரு ரெளடியைப் பிடிப்பதற்காக அவர் அங்கு வந்துள்ளார்.

சீருடையில் இல்லாமல், சாதாரண உடையில் இருந்த அவர் அப்பகுதியில் உள்ள பம்புசெட் அருகே மறைந்திருந்தார்.

பம்புசெட் அருகே யாரோ மறைந்திருப்பதைப் பார்த்த பொதுமக்கள், திருடன் என்று நினைத்தனர். ஒன்று திரண்டு அந்த சப் இன்ஸ்பெக்டரை சரமாரியாக அடித்து உதைத்தனர். தன்னை போலீஸ் அதிகாரி என்று அவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கூட கேட்காமல், கை, கால்களைக் கட்டி பம்பு செட் அறைக்குள் வைத்துப் பூட்டினர்.

அறைக்குள் பூட்டப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில், தனது பேண்டுக்குள் மறைத்து வைத்திருந்த வாக்கி டாக்கி மூலம் பெருங்குடி காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த பெருங்குடி போலீஸார் விரைந்து சப் இன்ஸ்பெக்டரை மீட்டனர்.

உள்ளூர் போலீஸாரிடம் சொல்லாமல் கொள்ளாமல் வந்து விட்டதால்தான், புதுக்கோட்டை சப் இன்ஸ்பெக்டருக்கு இந்த கதி நேர்ந்தது என்று பெருங்குடி போலீஸார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+