கோவை மருத்துவமனையில் கைதி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்தவர் நடராஜ். இவர் கொலை வழக்கு ஒன்றில் 7 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
உடல் நல பாதிப்பு காரணமாக அவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சையும் நடந்தது.இந் நிலையில், தான் அனுமதிக்கப்பட்டிருந்த கைதிகள் வார்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார் நடராஜ்.












Click it and Unblock the Notifications