சிறுமியிடம் பலாத்காரம் செய்த 2 மாணவர்கள் கைது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் 6 வயது சிறுமியை மாடிக்கு அழைத்துச் சென்று மானபங்கப்படுத்திய 16 வயது மாணவன் மற்றும் அவனது நண்பனையும் போலீஸார் கைது செய்தனர்.
திருப்போரூர் அருகே உள்ள தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் தமிழரசி. இவருக்கு 6 வயதாகிறது. தனது வீட்டின் முன் தமிழரசி விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த, பத்தாவது வகுப்பு மாணவன் சண்முகமும்,அவனது நண்பன் சக்திவேல் (வயது 15) என்பவனும், தமிழரசியை கூப்பிட்டுள்ளனர்.
மாடிக்கு அழைத்துச் சென்ற அவர்கள் தமிழரசியை அங்கு வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். தமிழரசியின் அழுகுரல் அவரது வீட்டுக்கு எட்டவே, குமார் ஓடி வந்து பார்த்துள்ளார். அவரைப் பார்த்தவுடன் பாதகச் செயலில்ஈடுபட்ட சண்முகமும், சக்திவேலும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
பதறிப் போன குமார் இதுகுறித்து திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் இருவரையும் தேடிப் பிடித்து கைது செய்தனர்.