For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 பயங்கர கொலைகளை செய்தவர் சரண்!

By Staff
Google Oneindia Tamil News

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுவனை பயங்கரமாககொன்று நெல் குதிருக்குள் புதைத்து விட்டு தப்பிய நபர் போலீஸில் சரணடைந்துள்ளார்.

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பத்மாவதி, அவரது மகள் ஜீவா, ஜீவாவின் அக்காள் மகன்பிரகதீஸ்வரன் ஆகிய 3 பேரும் சில வாரங்களுக்கு முன்பு பயங்கரமாக கொலை செய்யப்பட்டு,வீட்டில் இருந்த நெல் குதிருக்குள் கொடூரமாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலையைச் செய்த நபர் யார் என்பது குறித்து தனிப்படைஅமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந் நிலையில் செந்தில்குமார் என்பவர் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

பத்மாவதியின் உறவினர்தான் செந்தில்குமார். நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு இந்தக் கொலைகளைசெய்ததாக செந்தில்குமார் கூறியுள்ளார். அவரை திருத்துறைப்பூண்டி நீதிபதியின் வீட்டில்ஆஜர்படுத்திய போலீஸார், அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X