சிறைகளில் 27 நக்சலைட்டுகள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் மற்றும் வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 27 நக்சலைட்டுகளும் உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொண்டனர்.
தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை வனப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு போலீஸார் அதிரடிவேட்டை நடத்தி சில பெண்கள் உள்பட 27 நக்சலைட்டுகளைப் பிடித்தனர்.
அவர்களில் 21 பேர் சேலம் சிறையிலும் 6 பேர் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ரமணி என்ற பெண் கைதியின் தந்தை இறந்து விட்டதால், இறுதிச் சடங்கில்கலந்துகொள்ள அனுமதி கோரினார். ஆனால், சிறை நிர்வாகம் அனுமதி தர மறுத்து விட்டது.
இதையடுத்து இரு சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ள 27 கைதிகளும் இன்று முழுவதும் முதல்உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் இருந்து அவர்கள் எதையும் உண்ணமறுத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications