கேரளத்தில் ரணில்: குருவாயூர் கோவிலில் வழிபாடு
திருவனந்தபுரம்:
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இரண்டு நாள் பயணமாக கேரளா வந்தார்.
கொழும்பில் இருந்து இன்று காலை சிறப்பு விமானத்தில் மனைவி மைத்ரியுடன் கொச்சி வந்த அவரை கேரளசுற்றுலாத்துறை அமைச்சர் கே.வி. தாமஸ் வரவேற்றார். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்புஅளிக்கப்பட்டது. இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் சுமித் நகன்டலாவும் ரணிலை வரவேற்றார்.
இயைடுத்து சிறிது நேரம் விமான நிலையத்திலேயே ஓய்வெடுத்த ரணிலும் அவரது மனைவியும் பின்னர்அங்கிருந்து கார் மூலம் குருவாயூர் சென்றார்.
இன்று மாலை குருவாயூர் கிருஷ்னர் ஆலயத்துக்குச் சென்ற ரணிலும் அவரது மனைவியும் வழிபாடு நடத்தினர்.நாளை கேரளாவிலேயே தங்கும் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு திரும்புகின்றனர்.
ரணிலின் வருகையையொட்டி விமான நிலையத்திலும் குருவாயூரிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.
அமைதிப் பேச்சு: அமெரிக்கா அறிவுரை
இந் நிலையில் இலங்கை அமைதிப் பேச்சு எக் காரணம் கொண்டும்குலைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும்அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications