மாநகராட்சிப் பள்ளிகள் மீண்டும் சாதனை
சென்னை:
ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பயிலும் தமிழகத்தின் மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித் தரம் தொடர்ந்து பலஆண்டுகளாக படு வேகத்தில் முன்னேறி வருகிறது.
பல மெட்ரிகுலேசன் பள்ளிகளை விட அதிக அளவில் மாணவர்கள் பாஸ் செய்வது இந்த மாநகராட்சிப்பள்ளிகளில் தான். இந்த ஆண்டும் இந்தச் சாதனைையை மாநகராட்சிப் பள்ளிகள் தக்க வைத்துக் கொண்டுள்ளன.
பிளஸ் டூ தேர்வில் மாநகராட்சிப் பள்ளிகள் 64 சதவீத தேர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது.
சென்னையில் மொத்தம் 24 மாநகராட்சி மேல் நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் படித்து வந்த 3,829 மாணவ,மாணவியரில் 2450 பேர் பாஸ் செய்துள்ளனர்.
லாயிட்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சிப் பள்ளி 92 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது.
கோயம்பேடு பள்ளி 82.61 சதவீத தேர்ச்சியும், தரமணி பள்ளி 80.77 தேர்ச்சி விகிதத்தையும் பெற்றுள்ளது.
மொத்தம் 8 மாநகராட்சிப் பள்ளிகள் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இதை நிலை தான்தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாநகராட்சிப் பள்ளிகளிலும் உள்ளது.
ஆனால், கண் திருஷ்டியாக சென்னை நுங்கம்பாக்கம், சூளைமேடு, படேல் நகர், டி.எச்.சாலை, சி.ஐ.டி நகர் ஆகியபகுதிகளில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் 40 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தையேகாட்டியுள்ளன.












Click it and Unblock the Notifications