For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டாலின்- அழகிரி ஒற்றுமை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அழகிரி, ஸ்டாலின் எனும் இரு சகோதரர்கள் மட்டுமல்லாது, திமுக எனும் பெரும் குடும்பத்து சகோதரர்கள்அனைவரும் ஒற்றுமையுடன் கைகோர்த்து நடப்பது பெருமிதம் தருவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சமீபத்தில் திமுகவின் நிர்வாகிககள் குழுவுக்கு தேர்தல் நடந்தது. பதவிகளைப் பிடிக்க திமுகவினர் இடையே மாநிலம்முழுவதும் கடும் போட்டி ஏற்பட்டது. ஆள் கடத்தல், அடிதடி கூட நடந்தது.

பல இடங்களில் போட்டி மிகத் தீவிரமாக இருந்ததால் கருணாநிதியே தலையிட்டு சமரசம் செய்ய வேண்டிய நிலைஏற்பட்டது. அழகிரி கோஷ்டிக்கும் ஸ்டாலின் கோஷ்டிக்கும் தென் மாநிலங்களில் பெரும் மோதல் ஏற்படும் என்றுகருதப்பட்டது.

ஆனால், கருணாநிதியின் தலையீட்டால் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை விவரம்:

அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் மோதல், தகராறு, பூசல் என சில நாளிதழ்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றன.அப்படிப்பட்ட ஒரு செய்தியை நேற்று படித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்காவிலிருந்து ஸ்டாலின் எனக்குபோன் செய்தார்.

மதுரையில் உள்ள அண்ணன் அழகிரியுடன் நீண்ட நேரம் போனில் பேசியதாக அவர் தெரிவித்தபோது, எனதுகையில், ஸ்டாலின்-அழகிரி மோதல் என்ற செய்தியை வெளியிட்டிருந்த நாளிதழ் கையில் இருந்தது.

அந்த செய்தியால் வேதனையடைந்திருந்தபோது, போனில் ஸ்டாலின் கூறிய செய்தி பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.

ஸ்டாலின், அழகிரி இருவருமே, தங்களைப் பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் வருகிறபோது, மிகவும்கண்ணியமாகவும், பொறுப்புணர்வுடனும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தாத விதத்திலும் நடந்து கொண்டுள்ளனர்.

ஸ்டாலின், அழகிரி இருவர் மட்டும்தான் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றில்லை. திமுக என்ற மாபெரும்குடும்பத்தில் உள்ள அனைத்து சகோதரர்களுமே, கரம் கோர்த்து, ஒற்றுமையுடன் நடப்பது பெருமிதம் தருகிறதுஎன்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X