பொடா விவகாரம்: திமுகவுக்கு ராம.கோபாலன் சூடு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
பொடாவை முதலில் ஆதரித்த திமுக உள்ளிட்ட கட்சிகள் இப்போது அதை எதிர்ப்பது வேடிக்கையாகஉள்ளது என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பொடா சட்டம் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை மிகத்தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பை கருதி, கொண்டு வரப்பட்ட பொடா சட்டத்தை சிலரது நிர்பந்தத்திற்காகவாபஸ் பெறக் கூடாது.
பொடா சட்டம் கொண்டு வரப்பட்டபோது திமுக, மதிமுக போன்ற கட்சிகள் அதை தீவிரமாகஆதரித்தன. இப்போது அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது, அதை எதிர்க்கின்றனர்.
இது வேடிக்கையாக உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications