For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

9 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிப்பு

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

பாம்பன் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இயந்திரப் படகுகளில் கடலில் மீன் பிடிக்க 45 நாட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் இதையும் மீறி இந்நிலையில்,பாம்பன் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இயந்திரப் படகுகளில் கடலில் மீன் பிடிக்கச்சென்றனர்.

இவர்கள் சென்ற படகு, இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அவர்களைப்பிடித்துச் சென்றுள்ளனர்,

தலைமன்னார் அருகே உள்ள குள்ளக்கரன்திட்டை என்ற இடத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகஇலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 9 பேரும் தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் தான் இலங்கையால் கடத்தப்பட்ட 20 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இப்போது மீண்டும் இதே போன்றசம்பவம் நடந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X