அகதிகளை திரும்ப அனுப்ப வேண்டாம்: போராளி இயக்கம் கோரிக்கை
சென்னை:
இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளை, இலங்கையில் முழு அமைதி திரும்பும் வரையில் திரும்ப அனுப்பவேண்டாம் என்று ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின பொதுச் செயலாளர் ஞானசேகரன், பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம்எழுதியுள்ளார். அதில்,
இலங்கை இனப் பிரச்சினைக்கு முழுமையான, நிரந்தரமான தீர்வு ஏற்படும் வரை தமிழ் அகதிகளை, இலங்கைக்குத்திருப்பி அனுப்ப வேண்டாம். இந்தக் கோரிக்கையை அகதிகள் தஞ்சம் புகுந்துள்ள எல்லா நாடுகளுக்கும்விடுத்துள்ளோம்.
இலங்கையில் அமைதி திரும்ப ஐக்கிய நாடுகள் சபை மூலம், இந்தியா முன் முயற்சிகளை எடுக்க வேண்டும்.தற்போது இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் அமைதிப்பேச்சுவர்த்தைகளில், இனப் பிரச்சினையின் மூல காரணம் தவிர்க்கப்பட்டுள்ளது வருத்தம் தருகிறது என்றுகூறியுள்ளார் ஞானசேகரன்.
யாழ்பாணத்தில் விடுதலைப் புலிகளுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வரும் இயக்கம் இது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications