For Daily Alerts
Just In
தண்டவாளத்தில் நாச வேலை: சேலம் அருகே பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு
சேலம்:
சேலம் அருகே தண்டவாள ஸ்லீப்பர் கட்டைகள் சமூக விரோதிகளால் எரிக்கப்பட்டன. இந்த நாசவேலை உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.
சேலம், ஓமலூர் அருகே உள்ளது செம்மாண்டிப்பாளையம். இங்கு சேலம்-பெங்களூர் ரயில்பாதையில் ஒரு இடத்தில் ஸ்லீப்பர் கட்டைகள் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தன.
இதைப் பார்த்த பொது மக்கள் உடனடியாக அருகில் இருந்த ஓமலூர் ரயில் நிலையத்திற்குத் தகவல்கொடுத்தனர். இதையடுத்து அந்த வழியே வந்த ரயில்களை உடனே நிறுத்திய அதிகாரிகள்,சேதமடைந்திருந்த தண்டவாளத்தை சரி செய்தனர்.
நக்சலைட்டுகள் இந்த நாச வேலையை செய்திருக்க வேண்டும் என போலீசார் கூறுகினறனர்.
இந்த தண்டவாள நாச வேலை மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் பெரும் ரயில்விபத்து நேர்ந்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments
Story first published: Sunday, May 18, 2003, 5:30 [IST]