சாதனை படைத்த ஏழை மாணவர்கள்: ஜெவுக்கு வீரமணி கோரிக்கை
சென்னை:
கடுமையான வாழ்க்கை சோதனைகளுக்கிடையிலும் மாநில அளவில் பல்வேறு சிறப்புகளைப் பெற்று பிளஸ் டூதேர்வில் தேறியுள்ள மாணவ, மாணவிகளுக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி பாராட்டுதெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
சுமை தூக்கும் தொழிலாளியின் மகனான அழகுராஜ், பஞ்சாலைத் தொழிலாளியின் மகளான ஜீவஜோதி, செங்கல்சூளையில் வேலை பார்த்துக் கொண்டே படித்து சாதனை படைத்துள்ள செந்தமிழ்ச் செல்வன்,
கொத்தனாரின் மகளான காமாட்சி, காய்கறி விற்கும் வியாபாரியின் மகளான சித்ரா ஆகிய ஏழை மாணவ,மாணவிகள் தங்களது வறுமைக்கு மத்தியிலும் சிறப்பாக படித்து மாநில அளவில் ரேங்க் பெற்றுள்ளதுபாராட்டுக்குரியது.
அவர்களது மேல் படிப்புக்கு முதல்வர் ஜெயலலிதா உதவி செய்ய வேண்டும். தாராள மனம் படைத்தவர்களும்உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் அவர். (திராவிடர் கழகம் ஏதாவது உதவி செய்யுமா வீரமணிசார்..?)












Click it and Unblock the Notifications