For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதற்கெல்லாம் குண்டு வைப்பது?

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திருச்சிறம்பலம் என்ற இடத்தில் உள்ள ஊராட்சி அலுவகத்தில் குண்டு வைத்தது தொடர்பாகவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திருச்சிற்றம்பலத்தில் உள்ளது. இந்த அலுவலகத்தில்கடந்த 5ம் தேதி நள்ளிரவு குண்டுவெடித்தது. இதில் அலுவலகத்தில் இருந்த பைல்கள், நாற்காலிகள், மேசைகள்ஆகியவை சேதமடைந்தன. கட்டடமும் பெரும் சேதமடைந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் பாண்டிச்சேரிக்கு அருகே உள்ள கோட்டக்குப்பம் என்ற இடத்தில் செளந்தரராஜன் என்பவரைபோலீசாரிடம் சிக்கினார்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் மேலும் 6 பேர் சிக்கினர். இவர்கள்தான் ஊராட்சி அலுவலகத்திற்கு குண்டுவைத்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு அதிவேகமாக காரை ஓட்டி, பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தவர் மீதுமோதும் வகையில் சென்றதாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த மாநில நிர்வாகி செல்வம் என்பவரைதிருவான்மியூர் போலீஸார் கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வானூர் ஊராட்சி அலுவலகத்துக்கு இவர்கள் குண்டு வைத்தார்களாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X