27வது நாளாக தொடரும் போராட்டம்
சென்னை:
மருத்துவக் கல்லூ ரித் தேர்வுகள் திட்டமிட்டபடி வரும் ஜூன் 2ம் தேதி தொடங்கும் என்றுமருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
இவர் கூறியதாவது: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற போராட்டத்தைநடத்தினாலும் அவர்களுக்கு ஆதரவாக டாக்டர்களும் பேராசியர்களும் கூட போராட்டத்தில்இறங்கினாலும் திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி தேர்வுகள் தொடங்கும்.
இனிமேல் மாணவர்களுடன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பே இல்லை.
மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலை பேராசிரியர்கள் ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளவில்லை. எனவேதேர்வை நடத்துவதில் சிரமம் ஏற்படாது. அப்படியே சிரமம் வந்தாலும் பிற மாநிலபேராசிரியர்களை வைத்து தேர்வுகள் நடத்தப்படும் என்றார்.
இதற்கிடையே மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் இன்று 27வது நாளாக இன்றும்தொடர்ந்தது. வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு இன்றும் மாநிலம் முழுவதும் மாணவர்கள்போராட்டம் நடத்தினர்.
அரசு அழைத்தால் மீண்டும் பேசத் தயார் எனவும் மாணவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.