For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மது பாட்டில்களுடன் லாரி கடத்தல்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சி அருகே ரூ. 8 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களுடன் லாரி கடத்தப்பட்டுள்ளது.

திருச்சி அருகே திருவரங்குறிச்சி என்ற இடத்தில், பட்டப் பகலில் இச் சம்பவம் நடந்துள்ளது. மது பாட்டில்களுடன்வந்த இந்த லாரியை திருவரங்குறிச்சி அருகே சாலையோரம் நிறுத்திவிட்டு டிரைவர் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது காரில் வந்த ஒரு கும்பல் லாரிக்கு அருகே வந்தது. காரில் ரிப்பேர் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்பேனர்தேவை என்றும் காரில் இருந்தவர்கள் லாரி டிரைவரிடம் கேட்டனர்.

அப்போது டிரைவர் ஸ்பானர் எடுப்பதற்காக லாரியில் ஏறினார். அவருடன் காரில் இருந்த சிலரும் லாரியில்ஏறினர். திடீரென்று லாரி டிரைவர் மற்றும் கிளீனரின் கழுத்தில் கத்தியை வைத்த இவர்கள் கொடும்பாளூர் சத்திரம்என்ற இடத்திற்கு லாரியை ஓட்டுமாறு கூறினர்.

டிரைவரும் லாரியை அங்கு ஓட்டிச் சென்றார். அந்த இடத்திற்குச் சென்றதும் டிரைவர், கிளீனரை அடித்து கீழேதள்ளி விட்டுவிட்டு லாரியைக் கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டது அந்தக் கும்பல்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X