ஊட்டி மலர் கண்காட்சி: 1லட்சம் பேர் பார்வை
Subscribe to Oneindia Tamil
உதகமண்டலம்:
ஊட்டியில் நடந்து வந்த மலர்க் கண்காட்சி முடிவடைந்தது.
ஊட்டியில் வருடம் தோறும், சீசனின்போது மலர்க் கண்காட்சி நடைபெறும். அதுபோலவே, இந்தஆண்டு நடந்த மலர்க்கண்காட்சியை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டனர்.
இதில் மொத்தம் 25 அரங்குகள் இடம் பெற்றிருந்தன. இதுதவிர, கோவை வேளாண்மைப்பல்கலைக்கழகம், வெலிங்க்டன் ராணுவ பயிற்சி மையம், கர்நாடக தோட்டக் கலைத்துறைஆகியவற்றின் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஆயிரக்கணக்கான மலர்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியில் இடம் பெற்றிருந்தமலர்களில் சிறந்த மலர்களை வைத்திருந்த ஊட்டி குட்ஷெப்பர்ட் பள்ளிக்கு முதலமைச்சரின் தங்கக்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications