மாணவர்களுக்கு ராமதாஸ், இளங்கோவன் ஆதரவு
சென்னை:
தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவக் கல்லூரிமாணவர்களை மிரட்டுவதா என்று அரசுக்கு காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கண்டனம்தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று 1200 மாணவர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. 5,000பேர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள். நன்னடத்தை சான்றிதழில் பிளாக் மார்க் போடுவோம் என்றுமிரட்டுகிறார்கள்.
சீனியாரிட்டி கிடைக்காது என்று கூறுகிறார்கள். ஜனநாயக நாட்டில் எந்த ஆட்சியிலும் நடைபெறக்கூடாத செயல்கள் இவை. ஏழை, நடுத்தர மக்கள் இந்த ஸ்டிரைக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே இதை முடிவுக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
ராமதாஸ் கோரிக்கை:
5,000 மருத்துவக் கல்லூரி மாணவர்களை சஸ்பெண்ட் செய்து பிறப்பிக்க உத்தரவை அரசு திரும்பப்பெற வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மாணவர்களை சஸ்பெண்ட் செய்தது தவறானமுடிவு, இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும். அரசுக்கும், மாணவர்களுக்கும் இடையே நடந்தபேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது துரதிர்ஷ்டவசமானது.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் வந்தால் ஏழை மாணவர்களின் நலம் பாதிக்கும், மக்களுக்கும்பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார் அவர்.