சட்டமே காலாவதியான பின்னரும் இன்னும் நிலுவையில் இருக்கும் தடா வழக்குகள்!
சென்னை:
தடா சட்டம் காலாவதியாகி 7 ஆண்டுகள் ஆகியும் கூட, சென்னையில் உள்ள தடா நீதிமன்றத்தில் இன்னும் 12 தடாவழக்குகள் நிலுவையில் உள்ளன.
தடா சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் சென்னையில் இரண்டு தடா நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. இந்ததடா நீதிமன்றத்தில்தான் சென்னை சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்டமுக்கியமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது தடா சட்டம் நடைமுறையில் இல்லை. 7 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி விட்டது. இருப்பினும்இன்னும் 12 வழக்குகள் விசாரணை கட்டதிலேயே நிலுவையில் உள்ளன. இதில் முக்கியமானது ஆர்.எஸ்.எஸ்.அலுவலக குண்டுவெடிப்பு வழக்கு.
கடந்த 1993ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி,சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில்குண்டுவெடித்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 17 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களில் 2 பேர் தற்போது உயிருடன் இல்லை. ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். 5 பேர் ஜாமீனில்விடுதலையாகினர். கைது செய்யப்பட்ட அல் உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 10 பேர் சிறைச் சாலைகளில்உள்ளனர்.
இந்த வழக்கில் மொத்தம் 431 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டன. இவற்றில் 230 பேரிடம் விசாரணை நடத்தவேண்டியுள்ளது. மற்றவர்களிடம் விசாரணை முடிந்து விட்டது.
வரும் மே 22ம் தேதி இந்த வழக்கு விசாரணை மீண்டும் வருகிறது.
இது தவிர, 3 வழக்குகள் மட்டுமே தடா நீதிமன்றத்தில் "உயிருடன்" உள்ள வழக்குகள். மற்ற வழக்குகள் கிடப்பில்போடப்பட்டுவிட்டன.
காரணம்,யார் குற்றவாளிகள் என்றே இன்னும் உறுதியாகத் தெரியாதது தான். இதனால் இந்த வழக்குகளைதொடர்ந்து நடத்த முடியவில்லை.
1993ம் ஆண்டு தர்மபுரி ரயில்வே தண்டவளாத்தில் குண்டுவைத்த வழக்கு, குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில்குண்டு வைத்த வழக்கு, விழுப்புரம் காந்தி சிலை மீதான தாக்குதல் வழக்கு ஆகியவை இன்னும் விசாரணையில்உள்ளன. காந்தி சிலை தாக்குதல் வழக்கில், தமிழர் விடுதலைப் படை, தமிழர் மீட்புப் படை நக்சலைட்டுகளுக்குத்தொடர்பு உள்ளது.
நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தடா வழக்குகள் தாமதமாகிக் கொண்டுள்ளன.