போராட்டம் செய்தால் டிஸ்மிஸ்: டாக்டர்களுக்கு அரசு எச்சரிக்கை
சேலம்:
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் அரசு ஆணை 211-ஐ மாற்றும் பேச்சுக்கே இடமில்லைஎன்று சுகாதாரத் துறை அமைச்சர் செம்மலை கூறியுள்ளார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான விதிமுறைகள் குறித்த விவரங்கள் அடங்கிய அரசு ஆணை 211 ரத்துசெய்ய வேண்டும் என்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கோரி வருகின்றனர். ஆனால் இவ்வாறு கோரஅவர்களுக்கு உரிமை இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் செம்மலை கூறியுள்ளார்.
சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு உத்தரவு தொடர்பாக கேள்வி எழுப்ப மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை. இந்த அரசு உத்தரவு, எந்த வகையில் அவர்களைப்பாதிக்கப் போகிறது என்பதை அவர்கள் தயவு செய்து விளக்க வேண்டும்.
டிஸ்மிஸ்:
அரசு டாக்டர்கள், மக்கள் பணத்திலிருந்து சம்பளம் பெற்று வேலை செய்கிறார்கள். எனவே மக்களை வறுத்தும்எந்த வித செயலையும் மேற்கொள்ள அவர்களுக்கு உரிமை இல்லை. இதையும் மீறி போராட்டத்தில் இறங்கினால்அவர்களை டிஸ்மிஸ் செய்வோம்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரம் குறைந்தவை என்று கூறப்படும் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசுக்கல்லூரிகளுக்கு ஈடாகவே தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இயங்கும்.
டாக்டர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை சில அரசியல் கட்சிகள் தூண்டிவிட்டுவருகின்றன என்றார் அவர்.
ஆனால், இந்த மிரட்டலையும் மீறி திட்டமிட்டபடி 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்தொடங்கும் என அரசு மருத்துவர் சங்கத் தலைவர் பிரகாசம் அறிவித்துள்ளார்.