காவிரி நடுவர் மன்றம்: விரைவில் இறுதித் தீர்ப்பு வெளியாகிறது
பெங்களூர்:
காவிரி விவகாரத்தில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என மத்திய நீர்வளத்துறைஅமைச்சர் அர்ஜூன் சரண் சேத்தி கூறினார்.
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு தான் இதுவரை வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும்தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. நீரை கர்நாடகம் தர வேண்டும் என்று மன்றம் உத்தரவிட்டுள்ளது. (அந்தத் தீர்ப்பையேகர்நாடகம் மதித்தது இல்லை!).
இந் நிலையில் விரைவில் இறுதித் தீர்ப்பு வெளியாகும் என சேத்தி அறிவித்துள்ளார்.
வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது தான் கர்நாடகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி நடுவர் மன்றத்தை அமைத்துதமிழகத்துக்கு நியாயம் கிடைக்க உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பிருந்த அரசுகள் நடுவர்மன்றம் அமைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை குப்பையில் வீசின.
இப்போது இந்த நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் தான் தமிழகத்துக்கு ஆண்டுக்குஇவ்வளவு நீரைத் தந்தாக வேண்டும் என்ற நிலையில் கர்நாடகம் உள்ளது. நீரைத் தர கர்நாடகம்மறுக்கும்போதெல்லாம் இந்த இடைக்காலத் தீர்ப்பை முன் வைத்துத் தான் உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தால்போராட முடிகிறது.
இந் நிலையில் பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய சேத்தி, இரு மாநிலங்களின் வாதங்களை மன்றம் கேட்டுவருகிறது. விசாரணை கிட்டத்தட்ட கடைசி கட்டத்தை அடைந்துவிட்டது. இதை விரைவுப்படுத்த தினந்தோறும்விசாரணை நடக்கிறது. இதனால் விரைவிலேயே இறுதித் தீர்ப்பு வெளியாகும் என்றார்.












Click it and Unblock the Notifications