அடடா, இப்படியும் ஒரு சண்டையா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே திருவள்ளூரில் கத்தி, அரிவாள் விற்பனை செய்யும் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில்தந்தை, மகனின் காதுகள் அறுக்கப்பட்டன.
திருவள்ளூல் அவாள், கத்தி போன்றவற்றை விற்கும் கடையை வைத்திருப்பவர் ரவி. இவருக்கு பக்கத்தில் கடைவைத்திருப்பவர் சுந்தரராஜன். இருவரும் நண்பர்கள். சும்மா பேசிக் கொண்டிருந்த இருவரும் திடீரென அரசியல்பேச ஆரம்பித்தனர். இடுைத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் ரவியின் நண்பரான சுதாகர் என்பரும் ரவிக்கு ஆதரவாக பேசவே, நிலைமை முற்றி, கைகலப்புஏற்பட்டது.
அப்போது ரவியும், சுதாகரும் சேர்ந்து சுந்தரராஜன் மற்றும் அவரது மகன் விஜய் ஆகியோரின் காதுகளைஅரிவாளால் வெட்டினர். இதையடுத்து இருவரும் தப்பியோடிவிட்டனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரவியைக் கைது செய்தனர், சுதாகர் தலைமறைவாகி விட்டார்.












Click it and Unblock the Notifications