For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெயிலில் தகிக்கிறது தமிழகம்: தார் உருகி வழிகிறது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை, வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கடுமையான அனல் காற்று வீசியது.இதனால் சாலைகளில் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

மேலும் இரண்டு நாட்களுக்கு இந்த கடும் வெப்பம் தொடரும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம்அறிவித்துள்ளது.

கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திர காலம் வரும் 31ம் தேதி தான் முடிகிறது. இந்த அக்னி நட்சத்திரம்ஆரம்பித்தபோது வங்கக் கடலில் புயல் சின்னம் ஏற்பட்டதால் குளுமையான சூழல் நிலவியது.

ஆனால், புயல் தமிழகத்தை விட்டு தூரமாக ஓடி வலுவிலந்து கலைந்துவிட்டது. இதனால் சென்னை உள்படதமிழகத்தின் பல பகுதிகளிலும் கத்திரி வெயில் மண்டையைப் பிளக்கிறது.

பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே எட்டிப் பார்க்க முடியாத அளவு கொடும் வெயில் அடிக்கிறது. வேலூர்நகரில் வெயில் கொடுமை ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இப்போது இங்கு சராசரியாக 110டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த வெப்பத்தை அரக்கோணம் மிஞ்சியிருக்கிறது. அங்கு நேற்று 115டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

அதே போல சென்னையில் 110 டிகிரியும், பாண்டிச்சேரியில் 108 டிகிரியும், மதுரை, சேலம், கடலூரில் 106டிகிரியும், திருச்சி, பாளையங்கோட்டை 105 டிகிரியும், நாகப்பட்டிணத்தில் 101 டிகிரியும் பதிவாகியுள்ளது.

இதனால் பல்வேறு பகுதிகளிலும் அனல் காற்று வீசியது. கடும் வெயிலால் ரோடுகளில் தார் உருகி வழிந்துவருகிறது.

நேற்று முதல் கொடுமை செய்து வரும் இந்த பயங்கர வெப்பம் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலைஆராய்ச்சி நிலையம் மிரட்டியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X