மனைவி, 2 பெண்களை தீ வைத்து எரித்த முன்னாள் ராணுவ வீரர்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

தனது மகனின் கல்யாண விஷயத்தில் ஏற்பட்ட தகராறையடுத்து மனைவியையும் மேலும் இரு பெண்களையும் தீவைத்து எரித்துள்ளார் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர்.

இந்த திடுக்கிடும் சம்பவம் வேலூர் அருகே உள்ள ஆண்டியப்பனூர் என்ற ஊரில் நடந்தது. முன்னாள் ராணுவவீரரான இவரது மகனும் ராணுவத்தில் தான் உள்ளார்.

ராணுவத்தில் உள்ள இவரது மகன் தனக்குப் பிடித்த ஓரிடத்தில் பெண் பார்த்தார். அதை அவரது தாயாரும் ஏற்றுக்கொண்டார். ஆனால், தந்தை ஏற்கவில்லை. இதையடுத்து தந்தையின் எதிர்ப்பையும் புறக்கணித்துவிட்டு இன்றுநிச்சயதார்த்துக்கு ஏற்பாடு செய்தார்.

இந்த நிச்சயதார்த்தம் இன்று நடக்க இருந்தது. இதில் கலந்து கொள்ள உறவுக்காரப் பெண்கள் இருவரும் நேற்றேஇவர்களது வீட்டுக்கு வந்துவிட்டனர்.

இன்று நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் மாப்பிள்ளையின் தாயாரும், உறவுக்காரப் பெண்கள் இருவரும்நேற்றிரவு தங்களது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மாப்பிள்ளையின் அப்பாவானமுன்னாள் ராணுவ வீரர் அந்த வீட்டை வெளியில் இருந்து பூட்டிவிட்டுத் தீ வைத்தார்.

இதில் அவரது மனைவியும் மற்ற இரு பெண்களும் உடல் கருகி பலியாயினர். இதையடுத்து அந்த முன்னாள்ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+