For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிக சப்தம் எழுப்பும் ஆட்டோக்களுக்கு ரூ. 1000 அபராதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை நகரில் பீதியை ஏற்படுத்தும் விதத்தில் சப்தம் எழுப்பியபடி செல்லும் ஆட்டோக்களுக்கு ரூ. 1000அபராதம் விதிக்க போக்குவரத்துக் காவல்துறை முடிவு செய்துள்ளது.

சென்னை நகரில் வேகமாக செல்லும் ஆட்டோக்களால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் உரிம்இல்லாமல் ஏராளமான ஆட்டோக்கள் நகரில் உலவி வருகின்றன.

இதையடுத்து உரிமம், இன்சூரன்ஸ், பெர்மிட் இல்லாத ஆட்டோக்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்த அதிரடி சோதனையில் 500 ஆட்டோக்கள் பிடிபட்டன. மேலும் அதிக சப்தத்துடன் சென்ற 61ஆட்டோக்களும் பிடிபட்டன.

இதையடுத்து பொதுமக்களுக் பீதியை ஏற்படுத்தும் விதத்தில், அதிக சப்தத்துடன் செல்லும் ஆட்டோக்களுக்குஅபராதம் விதிக்க போக்குவரத்துக் காவல்துறை முடிவு செய்துள்ளது.

வரும் 25ம் தேதிக்குள் ஆட்டோக்களின் சைலென்சர்களை சரி செய்து கொள்ளுமாறு ஆட்டோ டிரைவர்களுக்குபோக்குவரத்துக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

கெடுவுக்குப் பிறகு, அதிக சப்தத்துடனும், மியூசிக்கல் ஹார்னுடன் செல்லும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை கூறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X