திமுகவை பிளக்க ஜெ. சதி: ஸ்டாலின் புகார்
மதுரை:
திமுகவை பிளக்க வேண்டும் என்பதற்காகவே அழகிரியை அவசர அவசரமாக அரசு கைது செய்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு அழகிரியை அவசர அவசரமாகஜெயலலிதா அரசு கைது செய்துள்ளது. இதனால் குற்றவாளிகளைப் பிடிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்பதுதெளிவாகிவிட்டது. திமுகவை பிளக்க வேண்டும் என்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
முன்னதாக அமெரிக்காவில் இருந்து நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை திமுகவை பழிவாங்கும் நோக்கிலேயே நடவடிக்கைகள்மேற்கொண்டு வருகிறார். அதேபோலத்தான் தா.கி. விஷயத்திலும், உண்மையான குற்றவாளியை விட்டு விட்டுதிசை திருப்பும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.
இது பழிவாங்கும் நடவடிக்கை. உட்கட்சித் தேர்தல் விஷயத்தில் தலைவர் கருணாநிதி என்ன முடிவெடுத்தாலும்அதை ஏற்பதாக நானம் தா.கிருட்டிணனும் தெரிவித்திருந்தோம். இதனால், தேர்தல் பிரச்சனையில் இந்தக்கொலையே நடக்கவில்லை. ஆனால், வேண்டுமென்றே ஜெயலலிதா இந்த பிரச்சனையை திசை திருப்ப காவல்துறையை ஏவி விட்டுள்ளார். இந்த பிரச்சினையை நீதிமன்றம் மூலம் சந்திப்போம்.
திமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் ஜெயலலிதாவின் முயற்சிகள் பலிக்காது என்றார்.
சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: இளங்கோவன்
இதற்கிடையே சேலத்தில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், தா.கிருட்டிணன்படுகொலை தொடர்பாக மு.க.அழகிரி அவசர அவசரமாகக் கைது செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தைத் தருகிறது.
தமிழகத்தில் ஜெயலலிதா அரசு பதவிக்கு வந்த பிறகு பல அரசியல் கொலைகள் நடந்துள்ளன. அப்போதெல்லாம்அவசரம் காட்டாமல், அக்கறை காட்டாமல் இருந்து விட்டு இப்போது தா.கி விஷயத்தில் இந்த அரசு காட்டும்அவசரமும், வேகமும் சந்தேகத்தைக் கிளப்புகிறது.
தா.கி படுகொலை குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே சி.பி.ஐ விசாரணைக்குஉத்தரவிட வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications