For Daily Alerts
Just In
நாமக்கல், தர்மபுரியில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பலி
தர்மபுரி:
தர்மபுரி, நாமக்கல், ராசிபுரம் ஆகிய இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலுக்கு இதுவரை3 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்கண்ட பகுதிகளில் கடந்த 3 மாதமாகவே டெங்குக் காய்ச்சல் பரவி வருகிறது. இப்போது பரவல் வேகம்அதிகமாகியுள்ளத. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
நாமக்கல் நகரில்தான் அதிக அளவில் டெங்கு பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்துசுகாதாரத் துறை அதிகாரகள், நகராட்சி சுகாதார அதிகாரிகள் குழு அங்கு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
Story first published: Thursday, May 22, 2003, 5:30 [IST]